Murder Recovered Recovered Recovered 14
இலங்கைசெய்திகள்

சூரிய குடும்பத்தில் புதிய விண்மீன் பந்தயம்!

Share

சர்வதேச வானியலாளர்கள் சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு விண்மீன்களுக்கு இடையேயான (interstellar) பொருள் வேகமாக பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது விண்மீன்களுக்கு இடையிலான நகர்வு பந்தையத்தில் கலந்துக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பொருளை, தற்போது A11pl3Z என வானியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

மேலும், இது மூன்றாவது வானியல் இடைவெளி பொருள் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வானியல் பொருட்களான 1I/ʻOumuamua (2017) மற்றும் 2I/Borisov (2019) என்பன போல் இல்லாது, A11pl3Z விசித்திரமான வடிவிலான பொருள் என்றும் இது ஒரு வால்வெள்ளி என அடையாளம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட A11pl3Z ஆனது அதன் பாதை மற்றும் பண்புகள் மூலம் இது சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து வந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் பிற வானியல் அவதானிப்பு மையங்களால் கண்காணிக்கப்பட்டு A11pl3Z வருவதாக கூறப்படுகிறது.

இதன் வேகமும், பாதையும் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு மூலத்திலிருந்து தோன்றியதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கூறியள்ளனர்.

இதுபோன்ற பொருட்கள் பால்வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திர அமைப்புகளிலிருந்து பயணித்து வரக்கூடும், என்றும் மேலும் இவை சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் பிற நட்சத்திர அமைப்புகளின் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிகள், இதுபோன்ற பல விண்மீன்களுக்கு இடையேயான பொருட்கள் நமது கவனத்திற்கு வராமல் கடந்து செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

A11pl3Z ஆனது தற்போது பூமியில் இருந்து 3.8 AU தொலைவிலும் (Astronomical Units) மற்றும் சூரியனில் இருந்து 4.8 AU தொலைவிலும் காணப்படுகிறது.

மேலும், சிலி மற்றும் ஹவாய் உள்ளிட்ட பல தொலைநோக்கிகள் மூலம் இதன் பாதை மற்றும் பண்புகள் கண்காணிக்கப்படுகின்றன.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...