coconut
செய்திகள்அரசியல்இலங்கை

ஒரு நாளைக்கு அரை மூடித் தேங்காய் போதும்: தென்னம் ஆராய்ச்சி சபைத் தலைவர் அதிருப்தி கருத்து

Share

நாள் ஒன்றுக்கு அரை மூடித் தேங்காயைப் பயன்படுத்துமாறு தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இக் கருத்தினால், தற்போது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சரியான முறையில் அரை மூடித் தேங்காயைப் பயன்படுத்தினால் அது சாத்தியம் என்றும், வீடுகளில் தேங்காய் பயன்பாடு நூற்றுக்கு 30 வீதமான அளவு விரயமாகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் வருடாந்த தேங்காய் அறுவடையில் 70 சதவீதம் உள்நாட்டுப் பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கையால் தேங்காய் பால் பிளித்தால் 20-30 சதவீதம் தேங்காய்ப்பால் கிடைத்தாலும், உரலில் இடித்து அல்லது அம்மியில் அரைத்து பால் எடுத்தால் 50 சதவீத தேங்காப்பால் பெறலாம்.

தற்போதைய நாட்டின் நிலை அறிந்து மக்கள் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...