5 14
இலங்கைசெய்திகள்

அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறும் முன்னாள் அமைச்சர்

Share

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கடந்த 2010ஆம் ஆண்டளவில் அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கிக் கொண்டிருந்தார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தனியாகப் பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பித்த போது சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அரசியல் களத்துக்குத் திரும்பி, அதில் இணைந்து கொண்டார்.

அவருக்கு அக்கட்சியின் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் போக்கில் அதிருப்தி கொண்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அண்மையில் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களில் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக சமூக சேவை விடயங்களில் நாட்டம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...