9 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

Share

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்காக, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு சேவையில் ஈடுபடும் இந்தியன் எயார்லைன்ஸ் விமானங்களில் சில இருக்கைகளை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, இந்த விமானங்களில் பயணிக்க விரும்புவோர், இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் வந்து பதிவு செய்யுமாறு அந்த தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை உணவகம்

ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மட்டுமே இதற்கான பதிவு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, டெல் அவிவிலிருந்து(Tel Aviv) ஜோர்தானின் அம்மானுக்கு(Amman, Jordan) போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.

அம்மானில் இருந்து புது டெல்லிக்கு விமான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது.

புது டெல்லியிலிருந்து கொழும்புக்கு இடையிலான விமான பயணச்சீட்டு கட்டணம் அறவிடப்படும்.

மேற்படி, நாடுகளில் உள்ள தூதரகங்கள் சம்பந்தப்பட்ட விமானங்களுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...