Untitled 1 Recovered Recovered
இலங்கைசெய்திகள்

கொட்டகலை பிரதேச சபை இ.தொ.கா வசம்

Share

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜேசுதாசன் வியாகுலமேரி சபையின் உப தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராஜமணி பிரசாத், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லெட்சுமன் விஷ்வநாதன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டதால், திறந்த வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் தனக்கு முன் அழைக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமன் விஷ்வநாதன் உட்பட நான்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

சபையில் 12 உறுப்பினர்களும், வலுவான கோரமும் இருந்ததால், பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 10 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து, ஆணையாளர் வெளிப்படையாக வாக்கெடுப்பை நடத்தினார்.

திறந்த வாக்கெடுப்பில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ராஜாமணி பிரசாந்த், 10 வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டு சுயாதீன உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

Share
தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....