23
இலங்கைசெய்திகள்

புதிய பாடத்திட்டம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Share

2029ஆம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்று(16.06.2025) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்வி மாற்ற செயன்முறை தொடர்பான வழிகாட்டுதல்கள் ஒகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த ஆண்டு முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 2028ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின்படி, 2029ஆம் ஆண்டு சாதாரணத் தரப் பரீட்சை நடத்தப்படும்.

அத்துடன், 9 ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...