22
இலங்கைசெய்திகள்

சிறப்பு நிலையான வைப்பு திட்டம் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

Share

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையில் முதியோருக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களால் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு செயல்படுத்தப்படும்.

நிலையான வைப்பு காலம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்ச வைப்பு மதிப்பு ஒரு மில்லியன் ரூபாயாகும்.

பொதுவாக வங்கியின் நிலையான வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 3 சதவீதம் சேர்க்கப்படும் தொகை அல்லது உரிய வங்கியினால் வெளியிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதம் ஆகியவற்றில் அதிகமான வட்டி வீதம் செலுத்தப்படும்.

Share
தொடர்புடையது
dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...