22
இலங்கைசெய்திகள்

சிறப்பு நிலையான வைப்பு திட்டம் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

Share

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையில் முதியோருக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களால் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு செயல்படுத்தப்படும்.

நிலையான வைப்பு காலம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்ச வைப்பு மதிப்பு ஒரு மில்லியன் ரூபாயாகும்.

பொதுவாக வங்கியின் நிலையான வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 3 சதவீதம் சேர்க்கப்படும் தொகை அல்லது உரிய வங்கியினால் வெளியிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதம் ஆகியவற்றில் அதிகமான வட்டி வீதம் செலுத்தப்படும்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...