25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Share

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜி.எம். சாண்டர்ஸ், கே.எம்.எஸ்.ஆர். கொடிதுவக்கு, பிரேமலால் ரணகல, சீ.ஈ. எதிரிசிங்க, டபிள்யூ.எம்.எல். வீரசேகர, உபாலி கல்கமுவ, டபிள்யூ.எல்.எஸ். சோமவீர, டபிள்யூ.டி. கொமசாரு, எப்.எஸ்.கே. ஜோசப், பி.சி.ஜே.டி. விஜேவர்தன (இவர் தற்போது உயிருடன் இல்லை) ஆகியவர்கள் ஆகியோர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஒரே தடவையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டமை வரலாற்றில் முதல் தடவை என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவி உயர்வுகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...