25 684a4204f26d8
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இராணுவ தளபதி இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரபூர்வ பயணம்

Share

இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்த ரொட்ரிகோ, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர், நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணம், இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், குறிப்பாக பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் முதல் நாள் புதுடில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அவர் மலர்வளையம் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

இதனையடுத்து அவருக்கு முறையான மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய இராணுவத்தின் இராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ் ராஜா சுப்ரமணியுடனும் ஏனைய அதிகாரிகளுடனும் உயர்மட்ட சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...