25 684a4204f26d8
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இராணுவ தளபதி இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரபூர்வ பயணம்

Share

இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்த ரொட்ரிகோ, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர், நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணம், இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், குறிப்பாக பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் முதல் நாள் புதுடில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அவர் மலர்வளையம் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

இதனையடுத்து அவருக்கு முறையான மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய இராணுவத்தின் இராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ் ராஜா சுப்ரமணியுடனும் ஏனைய அதிகாரிகளுடனும் உயர்மட்ட சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...