2 5
இலங்கைசெய்திகள்

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை: அரச மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்

Share

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் குறித்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் காலவரையின்றி தாமதமாகி வருவதாக அரச மருத்துவமனை ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஆய்வக அதிகாரிகளின் கூற்றுப்படி, இரசாயன பற்றாக்குறை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில், குறித்த இரசாயனங்கள் இல்லாததால் தனது அமைப்பும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுரங்கா தொலமுல்ல குறிப்பிட்டுள்ளார்.

டக்ரோலிமஸ் அளவு சோதனை என்பது ஒரு முக்கியமான சோதனையாகும், இது ஒரு மருத்துவர் பரிந்துரைத்தபடி, மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அல்லது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் செய்யப்பட வேண்டும் .

சோதனை முடிவுகளின் அடிப்படையில்: டக்ரோலிமஸ் அளவுகள் நிலையான வரம்பிற்குக் கீழே இருந்தால், அதன் அளவை அதிகரிக்க வேண்டும்.

அளவுகள் மிக அதிகமாக இருந்தால், கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்க அளவைக் குறைக்க வேண்டும்.

இந்தநிலையில் டக்;ரோலிமஸ் அளவை சரியாகக் கண்காணித்து சரிசெய்யத் தவறினால், அது உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இந்த சோதனை கிடைக்கவில்லை. தனியார் எனினும் தனியார் மருத்துவமனைகள் சுமார் 26,000 ரூபாய் செலவில் இந்த பரிசோதனையை வழங்குகின்றன.

இருப்பினும், இது அனைத்து சாதாரண மக்களுக்கும் தாங்கமுடியாத செலவாகும் என்று மருத்துவத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...