25 6848105265dab
இலங்கைசெய்திகள்

பொசன் தினத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை

Share

பொசன் போயா தினத்தை முன்னிட்டு சுமார் 300 பேருக்கு கண் தொடர்பான சத்திரசிகிச்சை வழங்கும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கசுன் குணவர்தனவின் யோசனையின் அடிப்படையில், கண் பிரச்சினைகள் உள்ள 300 பேருக்கு இன்று (10) காலை 5 மணி முதல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒரு சத்திரைசிகிச்சை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதன்போது ஒரே ஒரு சிறப்பு வைத்தியர் மாத்திரம் கண்புரை அகற்றுதல் மற்றும் உள்விழி உயிரியல் வில்லை(Lens fitting) பொருத்துதல் உள்ளிட்ட ஏராளமான கண் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின், துணை இயக்குநர் வைத்தியர் மதுஷா சத்குமார கூறுகையில்,

அறுவை சிகிச்சை அறையில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் தாதிய ஊழியர்களும் மற்றும், வைத்தியசாலையில் உள்ள மருத்துவ, தாதிய மற்றும் ஊழியர்களும், அதிகாரிகளுடன் இணைந்து பல நாட்கள் கடுமையாக உழைத்து இந்த தொண்டு செயலை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, தொடர்புடைய பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், 250 முதல் 350 பேர் வரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....