25 6848105265dab
இலங்கைசெய்திகள்

பொசன் தினத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை

Share

பொசன் போயா தினத்தை முன்னிட்டு சுமார் 300 பேருக்கு கண் தொடர்பான சத்திரசிகிச்சை வழங்கும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கசுன் குணவர்தனவின் யோசனையின் அடிப்படையில், கண் பிரச்சினைகள் உள்ள 300 பேருக்கு இன்று (10) காலை 5 மணி முதல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒரு சத்திரைசிகிச்சை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதன்போது ஒரே ஒரு சிறப்பு வைத்தியர் மாத்திரம் கண்புரை அகற்றுதல் மற்றும் உள்விழி உயிரியல் வில்லை(Lens fitting) பொருத்துதல் உள்ளிட்ட ஏராளமான கண் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின், துணை இயக்குநர் வைத்தியர் மதுஷா சத்குமார கூறுகையில்,

அறுவை சிகிச்சை அறையில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் தாதிய ஊழியர்களும் மற்றும், வைத்தியசாலையில் உள்ள மருத்துவ, தாதிய மற்றும் ஊழியர்களும், அதிகாரிகளுடன் இணைந்து பல நாட்கள் கடுமையாக உழைத்து இந்த தொண்டு செயலை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, தொடர்புடைய பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், 250 முதல் 350 பேர் வரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...