25 6848573303c6e
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அரங்கேறிய போர் குற்றங்கள்! ஜேர்மனியில் அநுரவுக்கு காத்திருக்கும் அழுத்தம்

Share

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜேர்மன் வலியுறுத்த வேண்டும் என ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ்(Philipp Frisch) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளைய தினம் உத்தியோகபூர்வ விஜயமாக ஜேர்மன் செல்லவுள்ளார்.

இந்த நிலையில், ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், சாட்சிய சேகரிப்பு செயல்முறையையும் நிறுவியுள்ளது.

எனினும், அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும் இதுவரையான செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் அதன் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரியவில்லை.

இதன்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, பேரவையின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

30 வருட யுத்தத்தின் போது, கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரச படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன், சிலரை வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கியுள்ளன.

எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜேர்மனி விஜயத்தின் போது, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அவரை ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...