25 68484587d6a77
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

Share

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவு எடுக்கப்படும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் இதனை அறிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய செயல்முறை போன்ற தீர்க்கப்படாத சட்ட மற்றும் தொழில்நுட்பசிக்கல்களே, இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவால்கள் போதுமான அளவு தீர்க்கப்பட்டு உள்ளூராட்சி சட்ட கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படாது என்று பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்து பின்னர் அதை நிராகரித்திருந்தார்.

இதன் விளைவாக, அரசாங்கம் இப்போது பழைய தேர்தல் முறைக்குத் திரும்புவதையும் மாகாண சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதையும் பரிசீலித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...