images 1 2
இலங்கைசெய்திகள்

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் : யன்னல் வழியாக கீழே குதித்த மக்களால் பரபரப்பு

Share

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் உயிரை காப்பாற்ற பொதுமக்கள் ஜன்னல், பால்கனி வழியாக கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரமான மர்மாரிஸ் இன்று (03) அதிகாலையில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கட்டிங்கள் குலுங்கிய நிலையில் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் மேலும் சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் மற்றும் பால்கனி வழியாக வெளியே குதித்துள்ளனர்.

இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில், துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 53,000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...