25 683e9d77f0492
இலங்கைசெய்திகள்

ஆனையிறவு உப்பின் பெயரை மாற்ற ஒப்புக்கொண்ட அரசாங்கம்!

Share

யாழ்ப்பாணம் – ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, “ஆனையிறவு உப்பு என மறுபெயரிடப்பட்டு, உள்ளூர் சந்தை வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

முன்னதாக ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ”ரஜ லுனு” என்று அழைக்கப்பட்டது.

இந்த நாட்டில் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சில பிரச்சினைகள் காரணமாக நாட்டின் தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...