25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

Share

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் நளின் பெர்னாண்டோ தண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கரம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் இந்த கரம் போர்ட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்து அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து களவாடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறும் வரையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருடர்களுக்கு தண்டனை விதிப்பது சிறந்த விடயம் எனவும் அதன் ஊடாக மக்களுக்கு ஏதேனும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

களவாடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கரம் மற்றும் தாம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து அவர்கள் களவாடிய சொத்துக்கள் மற்றும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...