10 34
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1209. 22 ஏக்கர் காணிகளை முப்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக மாவட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.

இருந்தபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்களின் காணிகள் மற்றும் திணைக்களங்களுக்குரித்தான காணிகள் இதுவரை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் காணி உரிமையாளர்கள் பலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 653, 65 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

குறிப்பாக அம்பாள் நகர் கிளிநொச்சி நகரம், திருநகர் ஜெயந்தி நகர் இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளில் இவ்வாறு அதிகமான காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலாள பிரிவில் 180, 38 ஏக்கர் நிலப் பகுதிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 116, 61 ஏக்கர் காணிகளும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 248, 18 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளன.

குறிப்பாக பூநகரி பிரதான மையப்பகுதியான வாடியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள சுமார் 14 பேருக்கு சொந்தமான காணிகளும் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் அதன் உரிமையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாளை பூனகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1209, 22 ஏக்கர் வரையான காணிகளை கடந்த 15 வருடங்களுக்கு மேல் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...