18 24
இலங்கைசெய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முக்கிய சந்திப்பு

Share

கிளிநொச்சி (Kilinochchi) – ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

பல்கோரிக்கைகளை முன்வைத்து உப்பள ஊழியர்களின் ஒருதரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதி செய்து விநியோகிக்குமாறும் தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் கடந்த 14ஆம் திகதி ஆனையிறவுஉப்பளத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் அரச சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தல் மற்றும் ஆனையிறவில் உள்ள உப்பை வெளியிடத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்க கூடாது என கிளிநொச்சி பொலிஸார் கிளிநொச்சி நீதிவான் நீதமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...