25 6833d5926b240
இலங்கைசெய்திகள்

மியான்மரில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 400 ஏதிலிகள் உயிரிழந்திருக்கலாம்: வெளியிடப்பட்டுள்ள அச்சம்

Share

மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக, தப்பிச்செல்ல முயன்ற 427 ஏதிலிகள், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல், மியான்மரில், முஸ்லிம் சிறுபான்மையினர், அந்த நாட்டு படையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அவர்களில் சிலர் கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.

இந்தநிலையில், அண்மையில், நாட்டில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஏதிலிகளின் இரண்டு கப்பல்கள், கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த 9ம் திகதி 267 பேருடன் சென்ற கப்பலில் இருந்து, 66 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, 10ம் திகதியன்று, 247 பேருடன் சென்ற கப்பலில், 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

இந்தநிலையில், மீதமுள்ள 427 பேரின் நிலை பற்றி இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை.

சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
17487797691
சினிமாசெய்திகள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் ரீசெண்ட் க்ளிக்ஸ்..

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் ராணியாக திகழ்கின்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’, ‘கனா’,...

death
சினிமாசெய்திகள்

தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி...

WhatsApp Image 2025 06 01 at 17.50.09 683c46fc6b9bd
சினிமாசெய்திகள்

வெற்றி எனக்கென நினைத்தது இல்லை….!மனம் திறந்த காயத்திரி மற்றும் நசரின்..!

விஜய் டிவியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

maxresdefault 29 683c5da9b6598
இலங்கைசெய்திகள்

யூடியூபை அதிரவைக்கும் “விண்வெளி நாயகா..” பாடல்..! வெறித்தனமான அப்டேட்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த கனவு கூட்டணி ஒன்று 36 வருடங்களுக்குப் பிறகு...