1 29
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் மந்திர கோலால் மயங்காத ரணில்! மந்திரவாதிகள் வழங்கிய சக்தி

Share

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்த போது, மந்திர கோல் ஒன்று வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் மீது அதீத நம்பிக்கை கொண்ட ராஜபக்சர்கள், கடந்த ஆட்சிகளின் போது கேரளா மந்திரவாதிகளிடம் வசியம் செய்யும் மந்திர மோதிரங்களை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதீத சக்திகளை கொண்ட தங்க மோதிரம் மற்றும் சிறிய தங்க கோல் ஒன்றையும் மகிந்த எப்போதும் தன்வசம் வைத்திருப்பார். அதன்மூலம் தனக்கு சாதகமான நிலைப்பாடுகளை எட்டுவதற்கு அதன் தாக்கம் செலுத்தியதாக பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் காலில் சிகிச்சை செய்து கொண்ட மகிந்த ராஜபக்சவை, கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

இதன்போது மகிந்த அணிந்திருந்த மந்திர கோல் என அழைக்கப்படும் மோதிரம் ஒன்று ரணிலுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் மாந்திரீகம் மீது நம்பிக்கை கொள்ளாத ரணில், குறித்த மந்திர கோலை தனது அலுவலக அறையிலுள்ள மேசையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்சர்களின் ஆட்சியின் போது இந்தியாவின் கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிரபல மாந்திரீகர்களால் பாரிய யாகங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...