7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

Share

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில் செலுத்துமாறு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் 6 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம்(Anuradhapura) தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு இந்த சம்பவம் பதிவானது.

சம்பவம் நடந்த நேரத்தில் 27 வயதுடைய தகவல் தொடர்பு மைய இயக்குநரான, மனுதாரர், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் மீது இந்த தீர்ப்பு நேற்றையதினம்(23) வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டு உத்தரவுக்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறும் உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மொத்த இழப்பீட்டுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.

மனுதாரர் சுசில் பிரியங்க செனவிரத்ன, தம்புத்தேகம பொலிஸாரின் நடத்தைக்கு எதிரான போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்றதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு நேற்றையதினம்(23) வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...