14 25
இலங்கைசெய்திகள்

56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது

Share

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களைப் பெற்று வைத்திருந்த ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் இணைய சேவையாளராக நடித்து, டெலிகிராம் கணக்கு மூலம் இந்த புகைப்படங்களை அவர் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

56 சிறுமிகளும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டி பகுதியில் உயர்தர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை குறிவைத்து, 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் அடங்கிய டெலிகிராம் குழுக்களை இந்த நபர் அணுகியுள்ளார்.

அங்கு பெறப்பட்ட தொலைபேசி எண்கள் மூலம் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

அந்த தொலைபேசி எண்கள் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்ட சந்தேக நபர், தன்னை ஒரு பெண் போன்று காட்டிக் கொண்டுள்ளார்.

சிறுமிகளின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் இருப்பதாகவும், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் ஒன்லைன் சேவைக்குத் தெரிவித்து அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் அதிகாரசபையின் அதிகாரியாகக் காட்டிக் கொண்டு ஒரு மோசடி கணக்கை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி சிறுமிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கவும், தகாத புகைப்படங்களை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இவ்வாறு தரவுகளையும் தகாதபு கைப்படங்களையும் பதிவிறக்கம் செய்த 56 சிறுமிகள் பற்றிய தகவல்கள் சந்தேக நபரின் கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...