கடந்தாண்டு விண்ணப்பித்த கடவுச்சீட்டுகள் இன்னும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு விண்ணப்பித்த 43,000 கடவுச்சீட்டுகள் தாமதமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடவுச்சீட்டு வழங்குவது ஏற்கனவே முறையான முறையில் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.