21 14
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் செயற்பாடுகள்!

Share

நாடாளுமன்றில், அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது, இது நிகழ்ந்ததுள்ளது.

இதன்போது, சபாநாயகர் அமைச்சரை அமர உத்தரவிட்டார். இது சபாநாயகர் தனது சொந்த கட்சி உறுப்பினருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையிலும், பிரதமரின் ஒலிவாங்கியை சபாநாயகர், நிறுத்தியதாக, சபை முதல்வர் பிமல் ரட்நாயக்க குற்றம் சுமத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய அமர்வில், எந்த ஒழுங்கு பிரச்சினையும் இல்லை என்று கூறிய சபாநாயகர், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்க மறுத்துவிட்டார்.

அதேநேரம், அமைச்சர் வசந்த சமரசிங்க ஒரு கருத்தை தெரிவிக்க முயன்றார், ஆனால் சபாநாயகர் அவரை அமருமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...