1 23
இலங்கைசெய்திகள்

கிலோ கணக்கில் உப்பு கொள்வனவை அனுமதிக்க முடியாது : அமைச்சர் சுனில் அறிவிப்பு

Share

கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உப்பளங்கள் அமையப்பெற்றுள்ள அநேகமான இடங்களில் பெய்த கடும் மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கப்பட்ட அளவில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

காலநிலையை கட்டுப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஒரு கிலோ கிராம் கொள்வனவு செய்யும் மக்கள் பத்து, பதினைந்து கிலோ கிராம் எடையுடைய உப்பினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உப்பு விநியோகத்தை கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
nalinda jayatissa 2025.01.22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிடாததே சிறீதரன் மீதான தாக்குதலுக்குக் காரணம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு...

26 6971e601c561f
உலகம்செய்திகள்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் படுகொலை!

காசாவில் நேற்று (21) இஸ்ரேல் இராணுவம் நடத்திய மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும்...

1738759108 namal 2
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியரசு தின விழா: நாமல் ராஜபக்ச தலைமையிலான குழு ஒடிஷா பயணம்!

இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் (ஜனவரி 26) பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...

1fa1a750 f744 11f0 bc4f e37435658c86
செய்திகள்உலகம்

நியூசிலாந்தை உலுக்கிய கனமழை: மவுண்ட் மவுங்கானுய் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயம்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையைத் தொடர்ந்து, மவுண்ட் மவுங்கானுய் (Mount...