8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை வெளியிடும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு அதிருப்தி கொண்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் நிலந்தி கொட்டஹச்சி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் ஒருவர், இரண்டு அமைச்சர்கள் ஆகியோரை வரவழைத்து இது குறித்து தனது அதிருப்தியை ஜனாதிபதி நேரடியாகவே வெளிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மேற்குறித்த அரசியல்வாதிகளை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இனிவரும் காலங்களில் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விட வேண்டாம் என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பொறுப்பாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...