2 26
இலங்கைசெய்திகள்

ஆட்சி அமைக்க தடை ஏற்படுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரில்வின்

Share

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தடையினை ஏற்படுத்தினால், அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் எதிர் தாக்கங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விருப்பத்திற்கிணங்க அதிகாரம் அமைய வேண்டும் என்றும், அதில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆட்சி அமைக்க தடை ஏற்படுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரில்வின் | Government Wars Oppostition

இந்த உள்ளூராட்சி தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியே எனவும் நாம் 267 சபைகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதில் 120 இடங்களில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சபைகள் அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 32 சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் பிரச்சினை இல்லாமல் சபைகள் அமைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“சமகாலத்தில் சில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு, தற்போது இணைந்து சபைகள் அமைக்க முயற்சி செய்வது ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சபை அமைப்பைத் தடுப்பதை நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 14 சபைகள் பெற்றிருந்தாலும், அவற்றில் 13 இடங்களில் தனியாக சபைகள் அமைக்க முடியாத நிலைமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் உள்ளதால், பல இடங்களில் அதிகாரம் அமைப்பது அரசாங்கத்திற்கே சாதகமாக உள்ளது எனவும் கொழும்பு மாநகர சபையில் 11 ஆசனங்கள் போதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சுயேட்சைக் குழுக்களுடனும் பிற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....