2 24
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு நாமல் கோரிக்கை

Share

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உகண்டாவில் காணப்படுவதாக கூறப்பட்ட பணத்தையும் அரசுடமையாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ராஜபக்சக்கள் பணம் உழைத்திருந்தால் அவற்றை அரசாங்கம் அரசுடமையாக்க வேண்டுமென கோரியுள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க கூறிய பொய்களையே இன்று அனுரகுமாரக்கள் கூறுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

18 பில்லியன் டொலர் பதுக்கி வைத்திருப்பதாகவோ இல்லை எனவே ரணில் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரமான ஓர் அரசியல்வாதி எனவும் அனுரகுமார தரப்பினர் இந்த பொய்களை சமூகத்திற்கு எடுத்துச் சென்று தறபொழுது தடுமாறுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான குவித்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எந்தவொரு ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார் எனவும், வேண்டுமென்றால் சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...