6 16
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

Share

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் இருந்து பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், 2025 மே 7 ஆம் திகதியன்று ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, மே 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சிறைச்சாலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் யானை முத்து, பல மரப்பட்டை துண்டுகள் மற்றும் ஒரு சிறிய பொறிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவை அடங்கியுள்ளன.

விசாரணையின்போது, இந்த பொருட்கள் தனது தந்தையால் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தனது பாதுகாப்புக்காக அவற்றை சிறைக்கும் எடுத்து வந்ததாக ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
images 11
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம்...

14 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலந்தோட்டையில் கொடூரம்: பொலிஸார் மீது காரை மோதித் தள்ளிய கும்பல் – கான்ஸ்டபிள் பலி!

அம்பலந்தோட்டையில் இன்று அதிகாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கார் ஒன்று மோதியதில்...

25 691805cfda215
இலங்கைஉலகம்

உலகை அச்சுறுத்தும் பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்: 3-ம் உலகப்போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி!

எதிர்காலத்தைக் கணிப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பாபா வங்கா (Baba Vanga), 2026 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப்...

MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...