18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

Share

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (08) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீதமுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மாற்ற முடிவு செய்திருந்தது.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்றையதினம் (10) ஐபிஎல் 2025 தொடரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள போட்டிகளுக்கான திகதிகள் மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...