2 21
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை! ரஷ்யாவுக்கான ஆயுத ஏற்றுமதிக்கு திட்டமிடும் வட கொரியா

Share

வட கொரியாவானது மீண்டும் பல்வேறு வகையான குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“வட கொரியாவின் கிழக்கு துறைமுக நகரமான வோன்சன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.10 முதல் 9.20 மணி வரை பல ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டன.

இந்த ஏவுகணைகளில் ஒன்று அதிகபட்சமாக 800 கி.மீ. தொலைவு பாய்ந்து கடலில் விழுந்தது. இந்தச் சோதனைகளுக்கும், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொடா்பு இருக்கின்றதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.

ரஷ்யாவின் இஸ்காண்டா் ஏவுகணையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் செயல்திறனைச் சோதிக்க இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்ச் 10-ஆம் திகதிக்குப் பிறகு ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...