14 9
இலங்கைசெய்திகள்

தெற்காசியாவில் முதன்முறையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்த அங்கீகாரம்

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்குப் பிரிவான ஸ்ரீலங்கன் கார்கோ, லித்தியம் மற்றும் சோடியம் அயன் பேட்டரிகளை கொண்டு செல்வதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற தெற்காசியாவின் முதல் விமான நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவதற்காக, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தால் கடுமையான மதிப்பீடு மற்றும் தணிக்கை செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஸ்ரீலங்கன் கார்கோவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த மின்கலங்களின் பயன்பாடு தற்போது உலகளவில் வேகமாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அங்கீகாரத்தை பெறுவது இலங்கையின் அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் ஒரு பெரிய சாதனையாக மாறியுள்ளது.

ஸ்ரீலங்கன் கார்கோ வாரத்திற்கு உலகம் முழுவதும் 21 நாடுகளில் 30 நகரங்களுக்கு நேரடியாக சேவையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...