23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

Share

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளது, மனித உரிமைகள் அமைப்பு ஒன்று.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau, வெளிநாட்டவர்கள் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பான Defenseur des Droits என்னும் அமைப்பு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது ஏற்கனவே கடினமான விடயம், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று சாடியுள்ளது.

Defenseur des Droits அமைப்பின் தலைவரான Claire Hédon, ஒருவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அவர் அதற்கான பதிலைப் பெறுவதற்குள்ளேயே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது ஏற்கனவே கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

அதற்கு மாறாக, ஏற்கனவே முறைப்படி பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியிருப்பு அனுமதி அட்டைகளை புதுப்பிப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

ஆகவே, அந்த பிரச்சினையை முதலில் தீர்ப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார் Claire Hédon.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...