15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

Share

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிரவாதம் மற்றும் போர் அபாயம் காரணமாக அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் பகுதிக்கு அருகில் கூட பயணிக்கவேண்டாம் என அமெரிக்கா விடுத்துள்ள பயண ஆலோசனை தெரிவிக்கிறது.

கனடாவும், பாகிஸ்தானுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான், மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஈரான் எல்லை பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறும் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் உட்பட விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் பயணம் தொடர்பில் பயண ஆலோசனை வெளியிட்டுள்ளன.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், Dharamshala, Leh, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அம்ரித்ஸர் ஆகிய விமான நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அதனால் விமான புறப்பாடு, வருகை மற்றும் அடுத்தடுத்த விமான சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...