14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

Share

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல(Thalatha Atukorale) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகங்களை அமைப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தாங்கள் தயாராக உள்ளதாக, அதுகோரல செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதால், அதை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே தங்கள் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் எப்போதும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்ததாகவும் தாமும், கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவும் சிறிது காலத்திற்கு முன்னர் அவர்களுடன் உரையாடலை நடத்தியதாகவும் தலதா கூறியுள்ளார்.

அந்த செயல்முறையை இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...