3 6
இலங்கைசெய்திகள்

அநுரவை நெருக்கடிக்குள் தள்ளும் அரசியல்வாதிகள்! அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

Share

திருடர்களை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக குற்றவியல் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்ய போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

திருட்டு எப்போதும் இல்லாத அளவுக்கு நடக்கிறது. மோசடி மற்றும் ஊழல் நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் அமைச்சர் ஒருவர் ​​600 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளார்.

மோசடி சொத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்தை மீண்டும் கையகப்படுத்த முடியும். அந்த சட்டத்திற்கு அமைய முதலாவது முறைப்பாடு அமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் இதற்கு பணம் செலுத்தியதாக தகவல் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 லட்சம் ரூபாயில் வீட்டை மாற்றும் பத்திரத்தில் தேசிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே கையெழுத்திட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

திருட்டையும் மோசடியையும் ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்தார்கள், ஆனால் இன்று அவர்கள் இரட்டை வண்டிகளில் சென்று திருடுகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...