20 4
இலங்கைசெய்திகள்

சஜித் மீது கடும் விமர்சனம் முன்வைப்பு

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மேதினக் கூட்டத்தை சீர்குலைத்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம்(01) தலவாக்கலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வின் போது , மூத்த தலைவர்கள் பலரும் உரையாற்றக் காத்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா இரண்டவதாக உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையை முடித்துக் கொண்டவுடன் , அவசர வேலையொன்றுக்காக செல்ல வேண்டியிருப்பதாகத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் உரைக்குப் பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பு பிரதானி துஷார இந்துனில், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மூத்த அரசியல்வாதியான ஹர்ச டி சில்வா ஆகியோர் உரையாற்ற காத்திருந்த நிலையில், சஜித் அங்கிருந்து புறப்பட்டதை அடுத்து பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக மூத்த தலைவர்களின் உரையின் போது மைதானம் வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மே தின நிகழ்வுக்கு வருகை தருவதாயின் நிகழ்வின் கடைசி நிமிடம் வரை அங்கிருக்க வேண்டும் என்றும், வேறு வேலைகளுடன் அவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகை தருவதை சஜித் பிரேமதாச நிறுத்த வேண்டும் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...