17
இலங்கைசெய்திகள்

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

Share

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மே 5, 2025 முதல் அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் DS-160 விசா விண்ணப்பப் படிவத்தில் உள்ள பார்கோட் எண்(Barcode number) (“AA” என்று தொடங்கும்) தங்கள் விசா நேர்காணல் சந்திப்பை திட்டமிடப் பயன்படுத்தப்படும் எண்ணுடன் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளது.

பார்கோட் எண்கள் பொருந்தவில்லை என்றால், விண்ணப்பதாரர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

மேலும், சரியான DS-160 படிவத்துடன் புதிய சந்திப்பை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தாமதங்களைத் தவிர்க்க அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் தகவல்களை இருமுறை சரிபார்க்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு – https://www.ustraveldocs.com/lk/en/

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...