1 6
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா.. கொழும்பில் விசேட பாதுகாப்பு வளையம்

Share

கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் வாகனத்தில் இருந்து இறங்கியது தொடக்கம், மேடையில் ஏறி, மீண்டும் வாகனத்தில் ஏறும் வரை விசேட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தார்.

மேடையில் உரையாற்றும் போது அதற்கான காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி, முன்னொரு காலத்தில் தெமட்டகொடை என்பது பாதாள உலகக்கும்பல்கள் கோலோச்சிய, போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆதிக்கம் செலுத்திய பிரதேசமாகும்.

அதன் காரணமாகவே எனக்கு இன்று விசேட பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு எனக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தெமட்டகொடை என்பதற்காக அவ்வாறு பாதுகாப்பு வழங்குவதற்கு நேர்ந்துள்ளமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் கருத்து வௌியிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...