3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

Share

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சிறிலங்க பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (28) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, மேலும் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், “இந்த நாடு வேலை செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக இருந்தது.இந்த நாடு வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்து, ஆனால் தற்போது ஸ்தம்பிதமடைய செய்துள்ளனர்.

இதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியே இதனை செய்துள்ளது.

இவ்வாறு செய்வதற்கு, அவர்கள் இரண்டு விஷயங்களைப் பயன்படுத்தினர், ஒன்று சமூகத்தில் பொய்களைப் பரப்புவது. மற்றொன்று அந்தப் பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது.

எனவே இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினால், இந்த நாட்டில் தங்கள் எதிர்காலத்தை நேசிக்கும் மக்கள், ஒரு நாடு பொய் சொல்வதன் மூலமும், மற்றவர்களை வெறுப்பதன் மூலமும், உழைக்கும் மக்களை விமர்சிப்பதன் மூலமும் முன்னேறாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...