23
உலகம்செய்திகள்

திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த புடின்! எவ்வளவு மணிநேரம்?

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி வருகின்றனர். கடந்த ஈஸ்டர் நாளில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்திய ரஷ்யா, அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.

எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறினார்.

இந்த நிலையில், புடின் உக்ரைனுக்கு எதிரான போரை மூன்று நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில், சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.

இதனை குறிக்கும் வகையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மே 8ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை என 72 மணிநேரம் இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்தக் காலத்திற்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் தரப்பு இந்த முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நம்புகிறது” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....