23
உலகம்செய்திகள்

திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த புடின்! எவ்வளவு மணிநேரம்?

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி வருகின்றனர். கடந்த ஈஸ்டர் நாளில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்திய ரஷ்யா, அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.

எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறினார்.

இந்த நிலையில், புடின் உக்ரைனுக்கு எதிரான போரை மூன்று நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில், சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.

இதனை குறிக்கும் வகையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மே 8ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை என 72 மணிநேரம் இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்தக் காலத்திற்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் தரப்பு இந்த முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நம்புகிறது” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...