11 2
உலகம்செய்திகள்

ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்

Share

ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஜெலென்ஸ்கி ஒரு பில்லியனர் என சமூக வலைத்தளங்களிலும் ரஷ்யா வெளியிட்ட தகவல்களிலும் கூறப்பட்டு வந்தது.

ஆனால், இது உண்மையல்ல என்று தற்போது கூறப்படுகிறது.

ஜெலென்ஸ்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் நடிகராகவும் நகைச்சுவை கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார்.

1997ஆம் ஆண்டு அவர் நிறுவிய Kvartal 95 என்ற நகைச்சுவை குழு, பின்னாளில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக மாறியது.

அத்துடன், அவரது “Servant of the People” (2015-2019) என்ற தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் ஒரு சாதாரண ஆசிரியர் உக்ரைனின் ஜனாதிபதியாகும் கதாபாத்திரைத்தை ஜெலென்ஸ்கி ஏற்று நடித்திருந்தார்.

இந்த தொடர் அவருக்கு புகழை சேர்த்ததோடு பெரும் வருமானத்தையும் ஈட்டித் தந்தது.

அவருக்கு சொந்தமாக உக்ரைனில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.

கீவ் நகரத்தில் சில கூட்டுறவு சொத்துகள் மற்றும் ஒரு சிறிய வணிக கட்டிடமும் அவருக்கு சொந்தமானதாக உள்ளது.

எவ்வாறாயினும், போரின் காரணமாக உக்ரைனில் தொழில் மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அவரது வருமானம் மேலும் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...