5 2
இலங்கைசெய்திகள்

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இன்று முதல் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வாரம் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் கூறியதை மறுத்துள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், வெள்ளிக்கிழமை முதல் எந்த எரிபொருள் ஓர்டர்களும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (02.28) காலை 10 மணிக்கு முன்பு 1,581 ஓர்டர்கள் கிடைக்கப்பெற்றதாக சங்கம் ஒப்புக்கொண்ட போதும் அதன் பிறகு புதிய ஓர்டர்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு திங்கள்கிழமை வரை நீடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வார இறுதியில் சில எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் பெற்றிருந்தாலும், பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங்களிடம் இருப்பு இல்லை என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய பிறகு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட்டன, ஆனால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடனில் எரிபொருள் வழங்கப்படாது என விநியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...