இலங்கைசெய்திகள்

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share
5 2
Share

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இன்று முதல் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வாரம் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் கூறியதை மறுத்துள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், வெள்ளிக்கிழமை முதல் எந்த எரிபொருள் ஓர்டர்களும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (02.28) காலை 10 மணிக்கு முன்பு 1,581 ஓர்டர்கள் கிடைக்கப்பெற்றதாக சங்கம் ஒப்புக்கொண்ட போதும் அதன் பிறகு புதிய ஓர்டர்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு திங்கள்கிழமை வரை நீடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வார இறுதியில் சில எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் பெற்றிருந்தாலும், பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங்களிடம் இருப்பு இல்லை என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய பிறகு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட்டன, ஆனால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடனில் எரிபொருள் வழங்கப்படாது என விநியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...