su
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Share

இதுவரையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது.
அத்துடன் அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசி இறக்குமதியை செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன இந்தத் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

இன்றுமுதல் வெள்ளைச் சீனி கிலோ ஒன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யவும் சில்லறை விற்பனையில் 150 ரூபா வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் 976 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியுள்ளன.
இந்த நிலையில் இஅந்தக் கொள்கலன்களை விடுவிக்க 16 மில்லியன் மெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

இ்ந்த நிலையில் சீனி கொள்கலன்களை விடுவிக்க வெளிநாட்டு இருப்புக்கள் வழங்க நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...