5 48
இலங்கைசெய்திகள்

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

Share

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும் போது, அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...