12 30
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு செயலாளர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Share

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyacontha) பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்று (24) காலை ஆராய்ந்தது.

இதற்கிடையில், பிப்ரவரி 22 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயுதப்படை வீரர்கள் முப்படைகளை விட்டு வெளியேறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது அல்லது பாதாள உலகக் குற்றக் கும்பல்களில் சேருவது போன்ற போக்கு காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், அத்தகைய நபர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகிய இரண்டிலும் ஆயுதப் பயிற்சியுடன் வெளியேறுபவர்களைக் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடித்து கைது செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவியல் குழுக்களுடன் இராணுவ வீரர்களும் தொடர்பு கொண்டுள்ளார்களா என்று ஒரு பத்திரிகையாளர் வினவியபோது, ​​பொருளாதார சிக்கல்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக சில வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், எதிர்காலத்தில் இதுபோன்ற இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...