5 45
இலங்கைசெய்திகள்

அரச மற்றும் தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பு: பேராசிரியர் வசந்த அதுகோரல கூறும் விடயம்

Share

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது, அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் மேலதிகமாக 900 பில்லியன் ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில் வரி கொள்கையை மறுசீரமைக்காமல் உயரளவிலான வரி வருமானத்தை ஈட்டிக்கொள்வது சவால்மிக்கது.

அரசாங்கத்தின் இலக்குக்கமைய வரி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதாயின் மக்கள் சுய விருப்பத்துடன் வரிச் செலுத்துவதற்கு முன்வர வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அரச சேவைக்கு 30 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த காரணிகளால் எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்க கூடும். நலன்புரி திட்டங்களுக்கு அரசாங்கம் பாரிய தொகை நிதியை செலவு செய்கிறது. இதுவும் பணவீக்கத்தை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு தேசிய மட்டத்தில் பெற்றுக்கொள்ளும் கடன்களை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டளவில் தேசிய கடன்களுக்கான வட்டி செலுத்ததை வரையறுப்பதற்கு இந்த ஆண்டு அரச கடன் பெறுதலை கட்டம் கட்டமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக தற்போது 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. எதிர்காலத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுமாயின் அதுவும் சவால்மிக்கதாக அமையும். உற்பத்தி துறையின் வினைத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்த சிறந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டுமென அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமைவாகவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடனை செலுத்துவதற்கு ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை செயற்படுத்தி அதன் வினைத்திறனான பயனை பெற்றால் மாத்திரமே 2028ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்களை பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...