4 40
இலங்கைசெய்திகள்

அச்சுறுத்தலுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ: பதில் பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்தும் விடயம்

Share

அச்சுறுத்தலுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ: பதில் பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்தும் விடயம்

அச்சுறுத்தலுக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ என்ற சந்தேகநபரை சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவிருந்த சந்தர்ப்பத்தில் அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவிருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனால் அன்றைய தினம் மெய்நிகர் ஊடாகவே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. இந்த நிலையில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட 183 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதேச அரசியல்வாதிகளால் தத்தமது பகுதிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் என பதில் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...