4 28
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள பல குற்றவாளிகள்

Share

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள பல குற்றவாளிகள்

இந்தியாவில்(India) தற்போது தலைமறைவாக உள்ள பல குற்றவாளிகள் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க, தெரிவித்துள்ளார்.

கொழும்பில்(Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய ஏழு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த 7 சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களை நாடு கடத்துவதற்கான திட்டம் நடைமுறையில் உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளார் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...