7 27
இலங்கைசெய்திகள்

பண மோசடியில் சிக்கிய ஹரிணி அமரசூரிய : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Share

பண மோசடியில் சிக்கிய ஹரிணி அமரசூரிய : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) பெயரும் இருப்பதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கருத்துக்களை அக்மீமன தயாரத்ன தேரர் (Akmeemana Dayarathana Thero) குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஹரிணி அமரசூரிய, பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நெருக்கடியில் தள்ளுவதற்கும், அந்நிய நாடுகளுக்கு அடிமைப்படுத்துவதற்காகவும் பணம் பெற்றுக் கொண்டதாக ஹரிணி அமரசூரிய தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் ஹரிணி அமரசூரியவின் பெயரும் இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில், யூஎஸ்எயிட் நிதி விவகாரம் தொடர்பில் ஹரிணி அமரசூரிய இதுவரை தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் எதுவித அறிக்கையொன்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....